Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2022 20:29:35 Hours

ஓய்வுபெறும் மத்திய தளபதிக்கு தளபதி வாழ்த்துகள் தெரிவிப்பு

இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே. சமந்த சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் இலங்கை இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலான முக்கிய பணியின் பின்னர் ஓய்வு பெற்று செல்லும் முன்னர், அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை புதன்கிழமை (9), அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

சிரேஷ்ட கவச வாகனப் படையணி அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி, அவரது அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு பொறுப்புகளில் தவறாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையுடன் செயற்பாட்டதிற்காக அவரைப் பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நிறைவின் போது கடமைகள் மற்றும் பணி தொடர்பாகவும் நினைவுகூர்ந்தார்.

மேஜர் ஜெனரல் எம்கேஎஸ் சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக தனது அலுவலகத்தின் செயல்திறனில் தளபதி வழங்கிய வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் சில மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சவாலான காலக்கட்டத்தில், சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி பாராட்டினார்.

கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு விசேட பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் எம்கேஎஸ். சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் 1987 மார்ச் 16 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்த இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டு இலங்கை கவச வாகனப் படையணியில் பணியமர்த்தப்படுவதற்கு முன்னர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி இல 27 இல் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார். அவர் 01 ஒக்டோபர் 2020 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக பதவி வகித்து வருகிறார். படையினருக்கான தலைவர், குழு பொறுப்பதிகாரி, அதிகாரி கட்டளை, தலைமைப் பயிற்றுவிப்பாளர், படையணி தலைமையக நிறைவேற்று அதிகாரி, கட்டளை அதிகாரி, சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர், கவச வாகனப் பிரிகேட் தளபதி, காலாட் படை பிரிகேட் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் ஆட்சேர்பு பணிப்பகத்தின் பணிப்பாளர், பிரிகேடியர் பொதுபணி, படைப்பிரிவு தளபதி, வழங்கல் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக. தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

போர்க்களத்தில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.