10th June 2023 17:43:51 Hours
திங்கட்கிழமை (05) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இனாமலுவவிலுள்ள 53 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தினுள் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்று 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு முகாம் வளாகத்திற்குள் நடுவதற்காக 350 ‘மருத’ மற்றும் ‘இலுப்பை’ மரக்கன்றுகளை சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவன தம்புள்ளை கிளை அன்பளிப்பாக வழங்கியது.
இத் திட்டத்தின் போது 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஆர்டபிள்யூகே ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவன தம்புள்ளை கிளையின் முகாமையாளர் திரு. பாத்திய ரத்நாயக்க மற்றும் சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தின் சில அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.