17th November 2023 05:37:24 Hours
சில நாட்களுக்கு முன்னர் பலாங்கொடை உடவெல, ஹொரங்கதுரு பிரதேசத்தில் மண்சரிவில் புதையுண்ட குடும்பத்தை தேடும் பணியில் 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேட்டின் 8 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் தொடர்ச்சியாக இரவோடு இரவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அப்பகுதியிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை (14) பெற்றோர் மற்றும் இரண்டு மகள்மார்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண் சரிவில்,இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் கொண்ட வீடு மண்ணில் புதையுண்டது. அந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு முதல் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டும் அந்த வீட்டில் இருந்தவர்களைக் கண்டறிய முடியவில்லை. சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாமல் படையினர் அந்த குடும்ப உறுப்பினர்களின் உடல்களை கண்டுபிடிக்கும் வரை தங்கள் மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்தனர்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எ.ஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிக்காட்டலின் பேரில் 8 வது கெமுனு ஹேவா படையினர் ஏனையவர்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.