27th February 2023 09:07:25 Hours
மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இளம் அதிகாரிகள் பாடநெறி 67-சீ புதன்கிழமை (பெப்ரவரி 22) வெற்றிகரமாக நிறைவு செய்த 98 பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இளம் அதிகாரிகள் பாடநெறி 67-சீ ஜனவரி 02 அன்று தொடங்கியதுடன் 45 வேலை நாட்களை உள்ளடக்கியது, புதிதாக நியமிக்கப்பட்ட இளம் அதிகாரிகளுக்கான அடிப்படை வனப் போர் பயிற்சியை உள்ளடக்கியது. இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரி முதலி அவர்கள் பாடநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு நிறைவுரை ஆற்றியதுடன், சான்றிதழ்களையும் வழங்கியும் வைத்தார்
4 வது விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் பிஎம் குணவதன, அவர்கள் தகுதி வரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொண்டதுடன், இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி அவர்களால் சிறப்பாகப் பாராட்டப்பட்டார்.