Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2024 18:22:09 Hours

இலேசாயுத காலாட் படையணியில் சேவை வனிதையரால் புதிய நலன்புரி விற்பனை நிலையம் திறப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு பனாகொட படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சேவை வனிதையர் நலன்புரி நிலையத்தை புதன்கிழமை (ஜனவரி 10) திறந்து வைத்தது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உத்பலா ஹெட்டியாராச்சி அவர்களின் கருத்திற்கமைய, இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விற்பனை நிலையம், உணவு, எழுதுபொருட்கள் மற்றும் பல அன்றாட பொருட்களை மலிவு விலையில் வழங்குகிறது.

இந்த திறப்பு விழாவில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.