Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2023 21:41:47 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 73 வது ஆண்டு நிறைவு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தனது 73 வது ஆண்டு நிறைவை கடந்த சில வாரங்களாக (டிசம்பர் 12) வரை தொடர் நிகழ்வுகளை மேற் கொண்டது.

இந் நிகழ்வுகள் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தளபதியும் வழங்கல் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் நெருக்கமான ஒத்துழைப்புடன், கொழும்பு 2 இல் உள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.

இந் நினைவாண்டிற்கு இணையாக, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் வறிய மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கழ் உட்பட 'புளூபெல் நைட் - இசை நிகழ்வு, 15 பௌத்த பிக்குகளுக்கு தானம், உலர் உணவுப் பொதிகள் விநியோகம், வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், குடும்ப ஒன்றுகூடல் மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆட்டோமொபைல் டெக்னாலஜி இரண்டு மாடிக் கட்டிடம் திறந்து வைத்தல் போன்றன இடம் பெற்றது.

ஆண்டு நிறைவு நாளில், இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு ஏற்ப இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன் அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இறுதியாக அனைத்து படையினருக்கும் மதிய விருந்துபசாரம் வழங்கியதுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.