Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2023 20:21:21 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் மறைந்த லெப்டினன் கேணல் ஆர்பீகேஎஸ்எஸ் ரணசிங்க அவர்களுக்கு தளபதி இறுதி மரியாதை

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் 28 வருடங்களுக்கு மேலாக நாட்டுக்கு சேவையாற்றிய லெப்டினன் கேணல் ஆர்பீகேஎஸ்எஸ் ரணசிங்க அவர்களின் இராணுவ இறுதி சடங்கு இராணுவத் தோழர்கள் மற்றும் அவரது உறவினர்களின் மாபெரும் கூட்டத்தின் மத்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் ஹோமாகம, கலவிலவத்த - நியதகலை மயானத்தில் இடம்பெற்றது.

இராணுவ தளபதியும் இராணுவ தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் பிற உறவினர்களும் இறுதிச் சடங்குகளின் போது மறைந்த அதிகாரிக்கு மரியாதை செலுத்தினர். லெப்டினன் கேணல் ஆர்.பீ.கே.எஸ்.எஸ் ரணசிங்க அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை (05) காலமானார்.

இராணுவ மரபுகளின்படி படையினர் பூதவுடலை பெற்று, துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடி போர்த்தப்படுவதற்கு முன்பு மயான நுழைவாயிலில் அருகில் ஆயுத மரியாதை வழங்கினர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவபேழையை சம்பிரதாயமாக பெற்றுக்கொண்டு சவபேழையின் பின்னால் குடும்ப உறுப்பினர்களுடன் வரிசையாக அணிவகுத்து, மயானத்தை நோக்கிச் சென்றனர்.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி நிறைவேற்று அதிகாரியினால் சிறப்பு ஆணை பகுதி ஒன்று துக்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தியதுடன் அடையாள துப்பாக்கி மரியாதை வழங்கினர். இது ஒரு இராணுவ அதிகாரி மறைந்தால் பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலியாகும். இறுதியாக சில நிமிடங்களுக்குப் பிறகு சிரேஷ்ட சிப்பாய் இப்போது அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி ஒலிக்கப்பட்டதனை தொடர்ந்து பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுடன் இணைந்து இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் ஆட்சேர்ப்பு அதிகாரி கேணல் என்.எச்.ஜே மங்கள மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி நிலையதளபதி கேணல் பி ஆர் எம் ஆர் ஏ பீ தோரதெனிய அவர்கள் இணைந்து லெப்டினன் கேணல் ஆர்.பீ.கே.எஸ்.எஸ் ரணசிங்க தனது புகழ்பெற்ற பணியின் போது பெற்றுக்கொண்ட சின்னங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினர்.

மறைந்த லெப்டினன் கேணல் ஆர்.பீ.கே.எஸ்.எஸ் ரணசிங்க மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 2009 மே மாதத்திற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பாராட்டத்தக்க பங்கை ஆற்றினார்.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு ஆணை பகுதி 1 பின்வருமாறு;