Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2018 16:45:16 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 28ஆவது படைத் தலைமையக ஆரம்ப விழா

இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு படையணியின் 28ஆவது படைத் தலைமையக ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இப் படையணியைச் சேர்ந்த யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த படையினருக்கான நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு மற்றும் பலவாறான முக்கிய நிகழ்வுகள் கடந்த வியாழக் கிழமை (1) குருணாகர் வெகெரவத்தையில் அமைந்துள்ள இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை தேசிய பாதுகாப்பு படையணித் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்களை இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பிரதி தளபதியான கேர்ணல் மகேஷ் குமார அவர்கள் வரவேற்றார்.

இதன் போது யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த படையினருக்கான இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மத வழிபாடுகள் இடம் பெற்றதோடு இப் படைத் தளபதியவர்களால் உயிர் தியாகம் செய்த படையிரின் நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேரும் இவ் அஞ்சலி நிகழ்வூகள் இராணுவ விதிமுறைகளுக்கு அமைவாக இனிதே இடம் பெற்று நிறைவடைந்தது. சில நிமிடங்களின் பின்னர் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வூகள் போன்றன இப் படைத் தலைமையக மத்திய தளபதியான பிரிகேடியர் எஸ் பி கொஹொன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இப் படைத் தலைமையகத்தில் மா மரக் கன்று நடல் நிகழ்வுகளும் குழுப் புகைப்படமும் எடுக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் இறுதியில் அனைத்து படையினருக்குமான மதிய போசன விருந்துபசார நிகழ்வூகள் இடம் பெற்றது. அத்துடன் ஒக்டோபர் 10ஆம் திகதி இப் படையினரால் பிரித் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் காலை உணவு அத்துடன் பௌத்த மத தேரர்களுக்கான உணவூகள் போன்றன வழங்கப்பட்டதுடன் மகா சங்கத்தின் 28 தேரர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கட்டளை அதிகாரிகள் படைத் தலைமைய அதிகாரிகள் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அதிகாரிகள் ஆணைச்சீட் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp