06th March 2024 18:29:26 Hours
இலங்கை சிங்க படையணி படையலகுகளுக்கிடையிலான தடகளப்போட்டி-2024 திகன விளையாட்டு மைதானத்தில் 2024 மார்ச் 02 மற்றும் 03 ம் திகதிகளில் இலங்கை சிங்க படையலகுகளின் 275 விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 02 மார்ச் 2024 அன்று பிரதம அதிதியாக தடகளப் போட்டியின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டார். 174 புள்ளிகளை பெற்று 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி முதலிடத்தையும் 103 புள்ளிகளுடன் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி இரண்டாம் இடத்தினையும் 16 வது இலங்கை சிங்க படையணி 100 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தினையும் வென்றன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்க படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் 03 மார்ச் 2024 அன்று நிறைவு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த பரிசளிப்பு நிகழ்வில் இலங்கை சிங்க படையணி நிலைய தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.