Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2023 22:24:31 Hours

இலங்கை சிங்க படையணியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்கள் நினைவு கூறல்

அம்பேஸ்புஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகம் 2023 ஒக்டோபர் மாதம் 21 - 22 ஆம் திகதிகளில் தனது உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து படையணி குடும்ப உறுப்பினர்களுக்கு பெருமை சேர்த்தது.

இலங்கை சிங்க படையணி படைத்தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிகளுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த தொடர்ச்சியான 31வது நினைவு நிகழ்வில், நாட்டின் பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த இலங்கை சிங்க படையணியின் 144 அதிகாரிகள் மற்றும் 3720 சிப்பாய்கள் நினைவாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத அனுஷ்டானங்கள் படையணி தலைமையகத்தில் பிரதான வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னதாக வரக்காபொல மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனித்தனி வழிபாட்டுத் தலங்களில் இடம்பெற்றன.

முக்கிய விழாவை முன்னிட்டு, 'பிரித்' பாராயண நிகழ்ச்சி மற்றும் துறவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.