Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 19:25:56 Hours

இலங்கை சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரி இந்திய பாதுகாப்பு சுபேதார் உயர் பாடநெறியில் பிரகாசிப்பு

இந்தியாவின் ‘இந்திய பாதுகாப்பு சுபேதார் உயர் பாடநெறி- 154’ கட்டுரை எழுதும் போட்டியில் இலங்கை சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரி II என்ஜீடிசி நாகஹாபிட்டிய முதலாம் இடத்தைப் பெற்றார்.

156 சிரேஷ்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்திய பாதுகாப்பு சுபேதார் உயர் பாடநெறி- 154’ பெப்ரவரி 10 அன்று தொடங்கி மார்ச் 16 அன்று இந்தியாவின் பரேலியில் உள்ள கனிஷ்ட தலைமைத்துவ கல்லூரியில் முடிவடைந்தது.

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 10 சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் இப் பாடநெறியில் பங்கேற்றனர்.