Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2023 17:23:48 Hours

இலங்கை சிங்கப் படையினரால் ‘பொசன்’ தினத்தில் அம்பேபுஸ்ஸ மக்களுக்கு அன்னதானம்

பொசன் போய தினத்தை முன்னிட்டு இலங்கை சிங்கப் படையணி படையினர், மற்றும் இலங்கை சிங்கப் படையணியின் முன்னாள் படைவீரர் சங்கம் இணைந்து 2023 ஜூன் 03 அன்று அம்பேபுஸ்ஸ சேனநாயக்க முச்சலிந்தராமய விகாரையில் வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் அன்னதானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் அன்னதான நிலையம் (தனசல) திறந்து வைக்கப்பட்டது. உபகரண பணிப்பாளர் நாயகமும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆரடபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன அவர்களும் இணைந்து அன்னதானத்தை திறந்து வைத்தனர். அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 3500 பேர் அன்னதானத்தை அனுபவித்தனர்.

இந்த நிகழ்ச்சிகள் படைத் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சிங்கப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டன.