Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2023 20:52:55 Hours

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையரால் அதன் குடும்பங்களுக்கு உலர் உணவு

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவு அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் 38 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டத்தை டிசம்பர் 22 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சி அவர்கள் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர அவர்களுடன் பிரதம விருந்தினராக, கலந்து சிறப்பித்தார்.

மேலும், அண்மையில் நடைபெற்ற கா.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்பான பெறுபேறு பெற்ற இலங்கை சிங்கப் படையினரின் தெரிவு செய்யப்பட்ட 9 மாணவர்களின் உயர்கல்விக்கு தலா 20,000/= புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.