Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2024 18:52:33 Hours

இலங்கை சிங்கப் படையணியில் ஓய்வுபெறும் பிரிகேடியர்களுக்கு மரியாதை

அபேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகம் அதன் பெருமைமிக்க ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரிகளான பிரிகேடியர் எல்.ஜி.ஜே.என்.ஆரியதிலக்க ஆர்.டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் பிரிகேடியர் வைஜிபீஎன் ஜெயரத்ன ஆர்எஸ்பீ ஆகியோருக்கு 24 மார்ச் 25 அன்று பிரியாவிடை அணிவகுப்பை நடத்தியது.

இதன்போது படையணி தலைமையக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை, அணிவகுப்பு மைதானத்தில் முறையான பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு மற்றும் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிகள் சிங்கப் படையணி போர் வீரர்களின் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தல் என்பன இடம்பெற்றன.

பின்னர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிங்கப் படையணிக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி, வெளியேறும் ஒரு நட்சத்திர சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

நிகழ்வின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில், ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரிகள் அனைத்து நிலையினர்களுக்கான தேனீர் விருந்து மற்றும் குழு படம் எடுத்தல் என்பவற்றிலும் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் சிங்கப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.