12th April 2023 06:10:48 Hours
இந்தியாவின் பெல்காம் கமாண்டோ பாடசாலையில் நடத்தப்பட்ட கமாண்டோ பாடநெறி இல-334 இன் போது, 14 வது இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஈஎம்கேஎல் குணரத்ன, ‘அதிக உந்துதல் பெற்ற வெளிநாட்டு மாணவர்’ என்ற விருது பெற்றார்.
இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நான்கு அதிகாரிகள் மற்றும் நான்கு சிப்பாய்கள் இந்தியாவின் பெல்காம் கொமாண்டோ பாடசாலையில் ஒரு மாத கால கொமாண்டோ பாடநெறியை பின்பற்றினர்.
பெல்காம் கமாண்டோ பாடசாலை இந்திய இராணுவத்தின் முதன்மையான பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இப்பாடசாலையில் இந்திய இராணுவத்தின் இளம் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது.