06th March 2023 09:00:47 Hours
மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க அவர்கள் இலங்கை சமிக்ஞை படையணியின் 16 வது படைத் தளபதியாக இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் மார்ச் 04 அன்று பதவியேற்றார்.
வருகை தந்த தளபதி மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க அவ.ர்களை சமிக்ஞை படையணி நிலைய தளபதி கேணல் கசுன் அதிகாரி வரவேற்றதனை தொடர்ந்து பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படையணி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை செலுத்த அழைக்கப்படுவதற்கு முன்னர், உயிர்நீத்த போர்வீரர்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் இந் நாளின் நினைவாக மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க அவர்கள் அங்கிருந்த அனைத்து அதிகாரிகளுடன் குழுபடம் எடுத்ததை தொடர்ந்து படையணி தலைமையகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
அதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க, இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியாக பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், படைத்தளபதி படையினரிடம் உரையாற்றியதுடன் படையணியின் எதிர்காலத்திற்கான தனது முன்னோக்கு பார்வையினையும் குறிப்பிட்டார். பின்னர் இந் நிகழ்வில் பங்கேற்றிய அனைத்து அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப ஊடாக அனைத்து படையலகுகளில் அதிகாரிகளுக்கும் உரையாற்றினார்.
தேநீர் விருந்து மற்றும் மதிய விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.