18th November 2023 20:10:16 Hours
இராணுவத்தின் இராணுவச் செயலாளரும், இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் சனிக்கிழமை (நவம்பர் 04) மோரேவெவ 6 வது இலங்கை கவச வாகன படையணிக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், 6 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர், இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதி வளாகத்தில் உள்ள சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன், முகாம் வளாகத்தையும் பார்வையிட்டார். படையினருக்கான உரையின் போது, தனிநபர்களாக உயர்தர ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவத்தையும், இராணுவ சேவையின் மதிப்பையும், சிப்பாய்ளுக்கு முன்மாதிரியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும், அதிகாரிகளின் தொழில் முன்னேற்றம் குறித்து இராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள சமீபத்திய இராணுவ கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அனைத்து அதிகாரிகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
படையணியின் படைத் தளபதி அன்றைய நினைவுகளைச் சேர்க்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், குழு படங்களும் எடுத்துக் கொண்டார். அவர் புறப்படுவதற்கு முன் பார்வையாளர்கள் பதிவேட்டுப்புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளையும் எழுதினார்.
இலங்கை கவச வாகன படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பீ.என் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இலங்கை கவச வாகன படையணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.கே.டி பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வை.எச்.பீ ரங்கஜீவ யூஎஸ்பீ,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.