19th April 2023 20:45:14 Hours
2023 ஏப்ரல் 11 ஆம் திகதி ரொக் ஹவுஸ் போட்டியில் 5 வது உளவுப் இலங்கை கவச வாகனப் படையணி முகாமில் உள்ள ரக்பி மைதானத்தில் நடைபெற்ற 2023 கவச வாகனப் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான ரக்பி போட்டியில் 4 இலங்கை கவச வாகனப் படையணியின் வீரர்கள் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.
இறுதிப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில் பிரதம அதிதியாக கவசப் வாகனப் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் டபிள்யூ பீ காரியவசம் மற்றும் நிலை தளபதி பிரிகேடியர் பீ என் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ எஸ்எல்ஏசி ஆகியோர் இறுதிப் போட்டிகளைக் கண்டுகளித்து வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
2023 ஏப்ரல் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டியில் 6 அணிகள் போட்டியிட்டன. 4 வது கவசப் படையணி மற்றும் முதலாவது கவச வாகனப் படையணியின் அணிகள் முறையே 1 ம் இடத்தையும் மற்றும் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.