Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2022 18:40:26 Hours

இலங்கை கவச வாகனப் படையணியின் நீச்சல் போட்டி நிறைவு

3வது இலங்கை கவச வாகனப் படையணியின் ஏற்பாட்டில் படையலகுகளுக்கிடையேயான நீச்சல் போட்டி - 2022 புதன்கிழமை (30) அனுராதபுரம் சல்காது நீச்சல் தடாகத்தில் இடம் பெற்றது.

இறுதி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவசம் கலந்து கொண்டார். கவச வாகனப் படையணியின் அனைத்து படையலகுகளிலும் 60 நீச்சல் வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

மகத்தான திறன்களை சகல போட்டிகளிலும் வெளிப்படுத்திய, 4 வது கவச வாகனப் படையிணியின் நீச்சல் வீரர்கள் போட்டியில் சாம்பியன்களாக தெரிவாகினர். 3 வது கவச வாகனப் படையணியின் போட்டியாளர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

4 வது கவச வாகனப் படையணியின் சிப்பாய் கே.எஸ்.ஆர் பீரிஸ், படையலகுக்கு இடையிலான நீச்சல் போட்டி - 2022 இல் தனது சிறந்த திறமைக்காக சிறந்த நீச்சல் வீரர் விருதை வென்றார்.