26th June 2023 20:58:16 Hours
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புமிக்க சேவையின் பின்னர் ஓய்வுபெறும் அதன் பெருமைமிக்க சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் டிசிகே பீரிஸ் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 23) பனாகொடவில் உள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகம் பிரியாவிடை அணிவகுப்பை நடத்தியது.
படையணி தலைமையக நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதையும் அதனை தொடர்ந்து முறையான பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை இலேசாயுத காலாட் படையணி போர் வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இலேசாயுத காலாட் படையணி போர் வீரர்களின் நினைவுதூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இப் பிரியாவிடை நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.