19th December 2023 00:42:05 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.கே ஜயவர்த்தன (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் சிறிது சுகயீனம் காரணமாக கொழும்பு நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (17) காலமானார். அவரது மரணத்தின் போது அவருக்கு 79 வயதாகும்.
அவரது இறுதி கிரியைகள் புதன்கிழமை (டிசம்பர் 20) மாலை 4.30 மணியளவில் பூரண இராணுவ மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறும். அவரது பூதவுடல் தற்போது பொரளை ஏ.எப் ரேய்மண்ட் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.