14th June 2023 18:35:01 Hours
இராணுவ பதவி நிலைப் பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் ஜூன் 8-11 வரை 12,15,19,23 மற்றும் 14 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த படைத் தளபதியினை அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் வரவேற்றதுடன் அவர்களின் தற்போதைய வகிபங்குகள் மற்றும் பணிகளை சுருக்கமாக முன்வைத்தனர். அன்றைய அதிதி படையினருக்கு உரையாற்றியதுடன், சிப்பாய்கள் என்ற வகையில் உயர் மட்ட ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் இராணுவ வாழ்க்கையின் மதிப்பையும் தெரிவித்தார். தற்போதுள்ள நலன்புரி வசதிகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாகப் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்த அவர், அந்த பிரச்சனைகளை சரிசெய்வதற்கு அந்தந்த கட்டளை அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் திருகோணமலை முள்ளிபொத்தானை 15 வது இலேசாயுத காலாட் படையணியின் புதிய பிரதான நுழைவு வாயில் , அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவறை ஆகியவற்றைத் திறந்து வைத்தார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி அவர்களின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், படையினரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நிலையத் தளபதி கேணல் எம்பீஎஸ்பீ குலசேகர டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகளும் விஜயத்துடன் இணைந்துக் கொண்டனர்.