Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2023 22:02:06 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி முகாம்களுக்கு விஜயம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 19) மன்னார் பெரியமடு 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் முகாமிற்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்எஎச்பி ஹேரத் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், பின்னர் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கான உரையின் போது, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில், வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன் சில குழு படங்களும் எடுத்துகொண்டார்.

அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.