Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2023 20:18:11 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத்தளபதி படையலகுகளுக்கு விஜயம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் காலி, பூஸ்ஸவில் அமைந்துள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக படையலகிற்கு தனது விஜயத்தை சனிக்கிழமை (செப்.16) மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை மேஜர் எஸ்.ஏ.டி.எம்.என். பிரசன்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதைக்கு பிறகு அன்புடன் வரவேற்றார். அதனை தொடர்ந்து அந்நாளின் நினைவுகளை சேர்க்கும் வண்ணம் தளபதி வளாகத்தில் மாங்கன்று ஒன்றை நாட்டி வைத்தார்.

பின்னர், அவர் படையினர்களுக்கு உரையாற்றியதுடன் நாட்டிற்கும் அமைப்புக்கும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஒழுக்க நிலைகளை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். இலங்கை இலேசாயுத காலாட் படையணி பதில் நிலைய தளபதி கேணல் எல்எச்சிஆர் சிறிவர்தன ஆர்எஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.