09th July 2023 22:07:27 Hours
இலங்கை இராணுவப் பொலிஸ் படையினர், இலங்கை இராணுவ இராணுவ மகளிர் படையணியின் பெண் சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து திங்கட்கிழமை (03) பனாகொட ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் 'சீல சமதான' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 600 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு 'கிலான்பச' (சிற்றுண்டி) வழங்கினர்.
சிப்பாய்கள் தாங்களாகவே சமைத்து இதனைத் வழங்கியதுடன், இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.