12th April 2023 06:17:20 Hours
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஓய்வுபெறும் பெருமைமிக்க சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் டிஎம்ஏ பண்டார அவர்களிற்கு பொல்ஹெங்கொடவில் உள்ள இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (8) பிரியாவிடை அணிவகுப்பு நடைபெற்றது.
பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் படைத் தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
பின்னர் பிரியாவிடை இரவு விருந்து, வழங்கப்பட்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் பங்கேற்றினர். பிரிகேடியர் அனுர பண்டார அவர்கள் ஆற்றிய சேவைக்கு ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி நிலைய தளபதி பிரியாவிடை செய்தியை வழங்கினார்.
பிரிகேடியர் டிஎம்ஏ பண்டார அவர்கள் தனது பதவிக் காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக, படைத் தளபதி, ஒழுக்க அதிகாரிகளின் குடும்பத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அனைத்து சிப்பாய்களுக்கும் நன்றி தெரிவித்தார். அவர் தனது அனுபவங்களை கனிஷ்ட அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன், அமைப்பின் நற்பெயரைப் பாதுகாக்கும் அதே வேளையில் ஒழுக்கமான அதிகாரியாக கடமைகளைச் செய்யுமாறு அவர்களை வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும், முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன், ஒழுக்க பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசிஏடி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்வில் பங்குபற்றினர்.