Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2023 23:27:01 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினரால் இலங்கை துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சித் திட்டம்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் வேண்டுகோளுக்கு இணங்க, 2023 ஆம் ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகாரசபையின் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் பாதுகாப்பில் உள்ள 30 அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படையினரால் ஒரு நாள் பயிற்சி பட்டறை இலங்கை துறைமுக அதிகாரசபை வளாகத்தில் நடாத்தப்பட்டது.

இந்த பயிற்சி பட்டறையில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பங்கு மற்றும் செயல்பாடுகள் மற்றும் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்குதல் ஆகியவை அடங்கும். ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாகத்தின் கேணல் ஒழுக்க பாதுகாப்பு அவர்களின் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த குழுவில், நன்கு தகுதியான இலங்கை இராணுவ பொலிஸ் படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றலுடன் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாகத்தின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் விரிவுரை உதவி வழங்கப்பட்டது. சம்பிரதாய வழாக்கள் குறித்த மேம்பட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவும் வழங்கப்பட்டது.

மேலும் பங்கேற்பாளர்கள் தங்கள் அறிவைப் புதுப்பிப்பதற்கும் முக்கிய பிரமுகர்களுக்கான சம்பிரதாய மோட்டார் வண்டிக் கடமைகளை வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்குதல் பற்றிய தகவல்களை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இந் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.