Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th November 2023 08:45:57 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் சேவை வனிதையரின் உதவியுடன் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் பொருளாதாரச் நெறுக்கடிகளை குறைக்கும் வகையில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் கிரித்தலையில் புதன்கிழமை (நவம்பர் 15) 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 53 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்கள் இராணுவ பொலிஸ் படையணி பெண்களுடன் இணைந்து இந்த நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவியர் கலந்து கொண்டனர்.