10th July 2023 23:20:10 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் 16 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் பனாகொடை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி படையினர் மத்தியில் ஒழுக்கம் மற்றும் நிபுணத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இலங்கை இராணுவத்தின் பெறுமதி மற்றும் மரபுகளை நிலைநிறுத்துவதற்கும் அனைத்து பணியாளர்களும் மிக உயர்ந்த நடத்தை தரங்களை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களையும் அவர் விவாதித்தார், மேலும் முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிந்து முகாமின் வசதிகளை மேம்படுத்த புதிய தீர்வுகளை முன்வைக்க அதிகாரிகளை ஊக்குவித்தார்.