Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2024 11:06:17 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரால் சிவில் பணியாளர்களுக்கு உலர் உணவு பொதிகள்

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரால் இலங்கை இராணுவ சேவைப் படையணியில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை 09 ஏப்ரல் 2024 அன்று இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் விநியோகித்தனர். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையுடன் இணைந்து இராணுவத்தினர் எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ சேவைப் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையண சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ அவர்களுடன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, அந்த நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு விநியோகித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.