20th March 2024 16:46:36 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்பத்திற்கு இலங்கை இராணுவ சேவைப் படையினரால் ஒரு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு, 17 மார்ச் 2024 ம் திகதி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திட்டம் போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் ஆர்.ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் திரு.தில்கரன் ராஜேந்திரா, திரு. பிரியங்கர விதானச்சி, திரு. சம்பத் பெத்தாவடு மற்றும் திரு. விமல் தென்னகோன் ஆகியோர் இத்திட்டத்திற்கான நிதி நன்கொடையினை வழங்கினர்.
4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினர் இந்த திட்டத்திற்கு மனித வள உதவியை வழங்கினர். மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் வீடு திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன் இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நன்கொடையாளர்களும் கலந்து கொண்டனர்.