Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2023 19:50:50 Hours

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி படைத்தளபதி 4 வது கவச வாகனப் படையணிக்கு விஜயம்

இராணுவ செயலாளரும் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் படைத்தளபதியாக திருகோணமலை 4 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணிக்கு தனது முதல் விஜயத்தை 2023 நவம்பர் 5 அன்று மேற்கொண்டார்.

அவருடன் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் பீஎன் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ கவச வாகனப் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்கேடீ பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களும் இணைந்திருந்தனர்.

முதலில் படைத்தளபதி அவர்கள் நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தனது வருகையை அடையாளப்படுத்தும் வகையில் மரக்கன்று ஒன்றை நட்ட பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றியதுடன், 4 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி மற்றும் கவசப் வாகன படையணியின் தரம் மற்றும் நியமங்களை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வருகை தந்த படைத்தளபதி அதிகாரிகளுடன் உணவகத்தில் கலந்துரையாடியதுடன் அங்கு அவர் 4 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியில் தனது பதவிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தார். புறப்படுவதற்கு முன்பு அவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

இந்த விஜயத்தின் போது, வளாகத்தில் புனரமைக்கப்பட்ட படையினர் உணவரையை திந்துவைத்தார்.

இந்த புதிய வசதியின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் 4 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி படையினரால் செய்யப்பட்டதுடன் பல நலன் விரும்பிகளால் கட்டுமானத்திற்கான பொருள் உதவியினை வழங்கியதுடன் விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆஎஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களினால் முழுவதுமான சீலிங் ஷீட்களை வழங்கியிருந்தார்.