26th December 2023 22:19:46 Hours
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த 81 மாணவர்களுக்கான "ஆளுமை மற்றும் திறன்கள் மேம்பாடு" மீது கவனம் செலுத்தும் விரிவான ஐந்து நாள் நிகழ்ச்சியை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அண்மையில் நடாத்தியது.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் டிசம்பர் 18 முதல் 23 வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டமானது தலைமைத்துவம், பிரச்சினைகளைத் தீர்ப்பது, சவால்களை சமாளிப்பது, நம்பிக்கையை வளர்ப்பது, ஒழுக்கம், தொடர்பு, குழுப்பணி, ஆளுமை மேம்பாடு மற்றும் சமூகம் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது.
இத்திட்டம் இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது. அவர்கள் அனைவரையும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு வரவேற்று சுருக்கமான உரையை நிகழ்த்திய பின்னர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி அவர்களினால் செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.