29th November 2023 10:04:45 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 30 வது ஆண்டு நிறைவினை ஒட்டி குறுகிய பாடநெறி இலக்கம் - 7 மற்றும் இலக்கம் - 8 இன் தமது பாடநெறியின் அதிகாரிகள் மறைந்த அதிகாரிகள் நினைவாக இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி வளாகத்திலுள்ள போர் வீரர்களின் நினைவு தூபியினை பராமரிப்பதற்காக சனிக்கிழமை (நவம்பர் 25) அன்று ரூ.1 00,000/= நன்கொடையாக வழங்கினர்.
இரண்டு பாடப்பிரிவுகளின் அதிகாரிகளின் பிரதிநிதி குழு, தங்களுக்குள் பரிசுத்தொகையைச் சேகரித்து, அந்த மதிப்புக்கான காசோலையை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டீஐ மஹாலேகம் டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களிடம் கையளித்தனர்.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 7 மற்றும் 8 குறுகிய பாடநெறிகளின் 19 அதிகாரிகள் நாட்டைப் பாதுகாப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.