20th September 2023 20:52:24 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தடகளப் போட்டி - 2023, இராணுவத்தின் பல்வேறு தொண்டர் படையலகுகளின் பங்குபற்றலுடன், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் 342 விளையாட்டு வீரர்கள் மற்றும் 79 விளையாட்டு வீராங்கனைகளுடன் ஆரம்பமானது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் எச்எல்விஎம் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களின் ஆசியுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்கால தடகள சாதனைகளை அணுகுவதற்கான ஒரு அற்புதமான முன்னேற்றத்தை தொடரும் விளையாட்டு உந்துதல் இலங்கை தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை தொண்டர் படையணியின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எம்டீகேஆர் சில்வா கேஎஸ்பீ தடகளப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
01 ஆம் நாள் (செப்டம்பர் 19) விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.