Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th August 2023 21:22:20 Hours

இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் ஐ.நா பாடநெறி நிறைவு

பாதுகாப்பு படை குழு முன் ஆயத்த பயிற்சி பாடநெறி லெபனான் இல-15 மற்றும் இலங்கை விமானப்படை ஏவியேஷன் யூனிட் முன் பணியிடல் பயிற்சி பாடநெறி மத்திய ஆபிரிக்கா எண்-9 ஆகியன 10 ஓகஸ்ட் 2023 அன்று குக்குலேகங்க இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவு பெற்றது.

2023 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடநெறியில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 280 சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை மற்றும் கோட்பாட்டு அம்சங்கள் மற்றும் சிறப்புப் பணிகள் குறித்த அடிப்படை அறிவை வழங்குவதற்காக இந்த பணி சார்ந்த பாடநெறிகளை முன்னெடுக்கின்றது.

பாடநெறியானது நிலம் மற்றும் சூழ்நிலை சார்ந்த பயிற்சிகள், விளக்கக்காட்சிகள், தேர்வுகள் மற்றும் களப் பயிற்சி போன்ற பல முக்கியமான நடைமுறைகளைக் கொண்டிருந்தது.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துகொண்டார்.