08th September 2023 15:30:45 Hours
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையிலான லெபனானில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகள், புதன்கிழமை (செப்டம்பர் 6) லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு பிரதி படைத் தளபதி பிரிகேடியர் சோக் பகதூர் சௌத்ரி அவர்களை சந்தித்தனர்.
இவ் விஜயத்தின் போது லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பிரதி படைத் தளபதி லெபனானில் உள்ள இலங்கைக் குழுவினால் ஆற்றப்படும் பங்கு மற்றும் பணிகளில் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை படையினரின் அமைதி காக்கும் கடமைகளின் முக்கியத்துவம் தொடர்பாக இலங்கை பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். இப் பணியில் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மிகவும் திறமையானவர்கள் மற்றும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்பதையும் சுற்றிக்காட்டினார்.
பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் நாடு பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கைப் படையினர் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையணிக்கு நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கைக் குழுவில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் ஆராய்ந்தார்.
எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டால் குழுவில் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பிரதி படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ,பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ , வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் வெளிநாட்டு நடவடிக்கைகள் கேணல் பீபீசீ பெரேரா பீஎஸ்சீ, 14 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் தளபதி லெப்டினன் கேணல் டி.பீ.எல்.டி களுஅக்கல ஆகியோர் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.
விரைவில் லெபனானில் நடைபெறும் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையணியின் பதக்கம் வழங்கும் அணிவகுப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.