12th October 2023 20:15:32 Hours
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் புதிய படைத் தளபதியாக திங்கட்கிழமை (ஒக்டோபர் 09) அம்பலாங்கொட கரந்தெனிய படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் நிலைய தளபதி அவர்கள் மரியாதையுடன் வரவேற்க முன்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அணிவகுப்பு சதுக்கத்தில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
மகா சங்க உறுப்பினர்களின் 'பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், சுப வேளையில் அவர் தனது கையொப்பத்தை உத்தியோகபூர்வ ஆவணத்தில் வைத்து புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார். அந்த நாளை நினைவுபடுத்தும் வகையில், வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, படையணியினருடன் சில படங்களையும் எடுத்துக் கொண்டார்.
அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.