Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2023 10:32:25 Hours

இராணுவ மற்றும் சிவில் பெண் கரப்பந்து வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் மோதல்

யாழ், பாதுகாப்பு படை தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவு படையினர் யாழ். குடாநாட்டில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும், இளைய தலைமுறையினரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், நடாத்தப்பட்ட கரப்பந்து போட்டியில் இறுதி போட்டி யோகபுரம் பெண்கள் கரப்பந்து அணிக்கும் 7 வது இலங்கை மகளிர் படையணி அணிக்கும் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 17) யாழ். 51 வது காலாட் படைப்பிரிவு சிமிக் பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியினை, 7 வது இலங்கை மகளிர் படையணி பெண் வீராங்கணைகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் அப்பகுதியில் ஏராளமான கரப்பந்து ரசிகர்கள் பார்வையிட்டனர். பலத்த மோதலுக்குப் பிறகு, யோகபுரம் பெண்கள் கரப்பந்து அணி வெற்றி பெற்று கோப்பையையும் ஊக்கத்தொகையையும் பெற்றது.

51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.