12th August 2023 17:41:59 Hours
விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் படி ஏற்பாடு செய்யப்பட்ட ‘படையணி விளையாட்டு உளவியல்’ என்ற தலைப்பில் புதன்கிழமை (ஓகஸ்ட் 09) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் 64 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஒன்றுகூடலில் விரிவுரையமர்வு இடம்பெற்றது. இது இந்த பணிப்பாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் விரிவுரைகளின் ஒரு பகுதியாகும்.
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டப்ளியு ஏயுஎஸ் வனசேகர ஆர்டப்ளியுபீ யுஎஸ்பீ இந் நிகழ்ச்சிக்கு உதவியதுடன் படையணி விளையாட்டு அதிகாரி இந் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
இலங்கை இராணுவ விளையாட்டு உளவியலாளர் கெப்டன் ஓடிஎஸ்கே ரூபஸ்ரீ 'மனநிலையைத் தொடர்வதன் மூலம் போட்டி மன அழுத்தம் மற்றும் உளவியல் தழுவலை நிர்வகித்தல்' எனும் தொனிப்பொருளில் விளையாட்டு உளவியல் விரிவுரை அமர்வை நடத்தினார்.