Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2023 17:28:30 Hours

இராணுவ மகளிர் படையணியின் மகளிர் சிப்பாய்களினால் ‘பொசன்’ தினத்தில் ஐஸ்கிரிம் தானம்

இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகம், முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவும் இணைந்து பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (03) ஐஸ்கிரீம் தானத்தை பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்திற்கு முன்னால் வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளதியுமான மேஜர் ஜெனரல் யூடீ விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி மற்றும் இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1 வது இலங்கை மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி தேவையான ஏற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்ததுடன், படையணி தலைமையகத்தில் உள்ள அனைத்து நிலையினர்கள் மற்றும் மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் இத்திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

இலங்கை மகளிர் படையணியின் படைத் தளபதி, இலங்கை மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இலங்கை மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை மகளிர் படையணி தலைமையகத்தின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 1 வது இலங்கை மகளிர் படையணியின் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.