07th November 2023 00:09:30 Hours
இராணுவ போர் கருவி படையணி வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) தொம்பேகொட இராணுவ போர் கருவி படையணியின் தலைமையகத்தில் போர்க்கருவி சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ போர் கருவி படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஎ முனசிங்க ஆர்எஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கியது.
இராணுவ போர் கருவி படையணியின் பிரியாவிடை பெறும் படைத்தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ போர் கருவி படையணியின் நிலைய தளபதி கேணல் கேஎம்எடபிள்யூகே பெரேரா எஎடிஓ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அணிவகுப்பு மைதானத்தில் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் அவர் படையணியின் படையினருடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டதுடன், மேஜர் ஜெனரல் ஜிஎ முனசிங்க ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ போர் கருவி படையணியின் புதிய படைத்தளபதி பிரிகேடியர் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி எஎடிஓ அவர்களிடம் தனது கடமைகளை கையளித்தார்.
பின்னர் பிரியாவிடை பெறும் படைத்தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், படையிருக்கு உரையும் ஆற்றினார். மாலையில் இராணுவ மரபுகளின் படி படையணி தலைமையகத்தின் அதிகாரிகளின் உணவகத்தில் பிரியாவிடை இரவு விருந்து நடைபெற்றதுடன், பிரியாவிடை பெரும் சிரேஷ்ட அதிகாரி உரையாற்றியதுடன் விசேட நினைவுச் சின்னத்தையும் பெற்றுக் கொண்டார்.
இராணுவ போர் கருவி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.