26th June 2019 10:00:18 Hours
பயிற்சி இலக்கம் – 74 இன் கீழ் இராணுவ பொலிஸ் படையணியில் பயிற்சிகளை நிறைவு செய்த பயிலிளவ படை வீரர்களது வெளியேற்ற நிகழ்வு மின்னேரியவில் அமைந்துள் கிரிதலை இராணுவ பொலிஸ் படையணியின் பயிற்சி முகாமில் இடம்பெற்றன.
கிரிதலை இராணுவ பொலிஸ் படையணி பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரியான மேஜர் பீ.ஜி எஸ் எம் போஹகவெல அவர்களது அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய மாணவ சிப்பாய் படையணியின் நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஏ எஸ் பி பொடிராலஹாமி அவர்கள் வருகை தந்தார்.
இந்த பயிற்சிகளில் அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த வீரனாக போர் வீரன் எஸ் யூ எஸ் சி பதிரன அவர்களும், சிறந்த துப்பாக்கி சூட்டாளராக போர் வீரன் பி ஏ ஆர் நிஷாந்தவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 2 ஆம் லெப்டினன்ட் பீ கே எம் போஹகபிடிய சிறந்த பிளட்டுன் கொமாண்டராகவும், சாஜன் டி ஆர் எஸ் பீரிஸ் சிறந்த சாஜனாகவும், கோப்ரல் ஆர் எம் என் எம் ரத்னாயக குழுத் தலைமை பிரிவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி நிறைவு வெளியேற்ற நிகழ்வில் அணிவகுப்பு, டைகொண்டோ (கராட்டி), பேன்ட், உடற்பயிற்சி கண்காட்சிகள் இடப்பெற்றன.
இந்த நிகழ்வினை பார்வையிட 1500 அதிதிகள் உட்பட படையினரது பெற்றோர்கள், உறவினர்கள் வருகை தந்தனர். Best Sneakers | Gifts for Runners