Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2022 21:40:12 Hours

இராணுவ பொறியியல் படையணியின் ஓய்வுபெறும் தளபதிக்கு பிரியாவிடை அணிவகுப்பு

பனாகொடவில் அமைந்துள்ள இலங்கை பொறியியல் படையணி தலைமையகம் அண்மையில் ஓய்வுபெறும் இலங்கை பொறியியல் படையணி தளபதியும் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களுக்கு வண்ணமயமான பிரியாவிடை அணிவகுப்பை நடத்தியது. இந் நிகழ்வு சனிக்கிழமை (டிசம்பர் 03) பனாகொடை படையணி தலைமையக மைதானத்தில் இடம்பெற்றது.

நேர்த்தியான பாதுகாவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் சம்பிரதாயமான மரியாதை அணிவகுப்பினை தொடர்ந்து வீரமரணம் அடைந்த இலங்கை பொறியியல் படையணி போர் வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் சமீபத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் விடுமுறை விடுதி மற்றும் புதுப்பிக்கப்பட்ட பி.டி ராமநாயக்க ஞாபகார்த்த காற்பந்து மற்றும் ரக்பி மைதானத்தை நாடாக்களை வெட்டியும், பதாகைகளை திரைநீக்கம் செய்தும் திறந்து வைப்பதற்காக அன்றைய பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்துடன் அன்றைய தின முதல் பாதி நிகழ்வுகள் நிறைவடைந்தன.

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்கள் கௌரவிப்பு நிகழ்வின் போது மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி இலங்கை பொறியியல் படையணி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அடையாளப்படுத்தினார்.

விடைபெறும் நாளுக்கு முன்னர், ஓய்வு பெறும் தளபதி பொறியியல் படைப்பிரிவுக்கு தனது இறுதி விஜயத்தை மேற்கொண்டதுடன் அங்கு பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் அவரை அன்புடன் வரவேற்றார்.