24th December 2023 23:57:44 Hours
இராணுவத் தலைமையகத்தில் பொறியியல் சேவை பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் பிரிகேடியர் ஈ.ஏ.டி.கே எதிரிசிங்க அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (24) மாலை காலமானார். அவரது மரணத்தின் போது அவருக்கு 52 வயதாகும்.
அவரது இறுதி கிரியைகள் புதன்கிழமை (டிசம்பர் 27) மாலை 4.30 மணியளவில் பூரண இராணுவ மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறும். அவரது பூதவுடல், இல - 974/80சி, இடமல்வத்தை வீதி, அன்னாசிவத்தை, அத்துருகிரிவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.