பங்களாதேஷின் டாக்காவில் உள்ள ஷஹித் தாஜுதீன் அகமது உள்ளக விளையாட்டு அரங்கில் டிசம்பர் 1 - 5 திகதிகளில் நடைபெற்ற 'யோனெக்ஸ் சன்ரைஸ் பங்களாதேஷ் இன்டர்நேஷனல் சேலஞ்ச்-2021' பூப்பந்து போட்டியில் இராணுவ பூப்பந்து வீரர்கள் இந்திய அணிக்கு எதிரான ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.
இலங்கை இராணுவ பூப்பந்து வீரர்களான இலங்கை காலாட்படையை சேர்ந்த சாதரண சிப்பாய் எச்.எஸ்.பி. டயஸ் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் பிரிவின் சாதரண சிப்பாய் பி.டி.டி.டி குணதிலக என்போர் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (5) போட்டியிட்டனர்.
இதில் இந்தியா, மலேசியா, மாலத்தீவு, பங்களதேஷ், இந்தோனேசியா, தாய்லாந்து, ஜாம்பியா, ஜிம்பாப்வே, இலங்கை உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர்.