Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2022 18:52:08 Hours

இராணுவ புலனாய்வு படையினரால் போதைப்பொருள் மீட்பு

7 வது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், 222 வது காலாட் பிரிகேட் புலனாய்வுப் பிரிவினர் கந்தளாய் பொலிஸாருடன் இணைந்து 2022 டிசம்பர் 18 ஆம் திகதி 80 மில்லிகிராம் “மெத்தம்பேட்டமைன்” (ஐஸ்) உடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர். போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம், 7 வது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் 222 வது காலாட் பிரிகேட் புலனாய்வுப் பிரிவினர் குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து, கும்புறுப்பிட்டியில் 50 கிராம் கஞ்சாவை (கேரள கஞ்சா) வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் போது இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்தனர். சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.