17th February 2023 21:20:40 Hours
புதியவர்களின் நீர்பந்தாட்டம் சம்பியன்ஷிப்-2023யை இலங்கை இராணுவ நீர்பந்தாட்ட வீரர்கள் பெப்ரவரி 16 அன்று இரத்மலானை விமானப்படை நீச்சல் தடாகத்தில் இலங்கையில் உள்ள 15 போட்டி அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸ் அணிகளுக்கிடையில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.
வெற்றி பெற்ற அணியில் சிறந்த வீரர்களாக 22 வது கஜபா படையணியை சேர்ந்த கோப்ரல் எச்.சி.எஸ் குமார மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி கோப்ரல் டபிள்யூ.கே ஜயசூரிய ஆகியோர் விருது பெற்றனர்.
இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் இறுதிப் போட்டியில் கலந்து சிறப்பித்ததுடன் வீரர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இலங்கை இராணுவ நீர்பந்தாட்ட அணி கடந்த ஆண்டு (2022) புதியவர்களின் நீர்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பையும் வென்றனர்.