21st April 2023 21:45:47 Hours
இராணுவ தொண்டர் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. ஏ.எஸ்.எஸ் வணசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மன அழுத்த முகாமைத்துவ தொடர்பான விரிவுரை ஏப்ரல் 19 ஆம் திகதி இலங்கை இராணுவ தொண்டர் படை பல்செயல்பாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது.
இந்த விரிவுரையை தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் ஆற்றியதுடன் அவர் ஆலோசனை மற்றும் உளவியலில் தொழில்ரீதியாகத் தகுதி பெற்றவர்.
இந்த அமர்வானது இதயங்களின் எடையைக் கண்டறியும் இசையில் ஒரு சிகிச்சை அனுபவத்துடன் கலந்திருந்ததுடன் மேலும் இது மன அழுத்த முகாமை மற்றும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் கடினமான வாழ்க்கை தொடர்பான விரிவான விழிப்புணர்வைக் கொண்டு வந்தது. ஒரு சிப்பாயின் பாத்திரம் மற்றும் மன அழுத்தத்திற்கு மத்தியில் அதன் நிர்வாகிப்பின் மூலம் அதை எவ்வாறு அதன் இலக்குக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை அவர் விவரித்தார்.
இந்த விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.