22nd April 2023 18:51:51 Hours
இராணுவ தொண்டர் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ்.எஸ் வணசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி 2023 ஏப்ரல் 17 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் வெளியிடப்பட்ட இராணுவத்தில் உள்ள அனைவருக்குமான அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் புத்தாண்டு செய்தி வாசிக்கப்பட்டது. தனது விருப்பத்தின் பேரில், இராணுவ உறுப்பினர்களின் முன்மாதிரியான நடத்தை மற்றும் அனைத்து சவால்களுக்கும் மத்தியிலும் தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் மக்களின் நலனுக்காக அவர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் வழக்கமான இனிப்புகள் மற்றும் பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதே வேளையில், தலைமையகத்தின் சிவில் ஊழியர்களுக்கு, ஸ்தாபனத்திற்கு வழங்கப்பட்ட சேவைகளைப் பாராட்டி தளபதியினால் விசேட பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது உடனிருந்த அனைத்து ஊழியர்களுடனும் தளபதி சுமுகமாக உரையாடினார். தொண்டர் படையணி பிரதிதளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வு நிறைவடைவதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் சிறந்த பாராட்டுகளைப் பரிமாறிக்கொண்டனர்.